இந்த காலத்தில் எது இன்பம் எது துன்பம் என்று நம்மில் பலருக்கு தெரிவதே
இல்லை. நாம் எந்த காரியமும் செய்யாமல் சும்மா இருக்கும் பொழுது நம் மனம் அலை பாய்கிறது. அப்பொழுது நாம் இசை, கவிதை, ஓவியம், புத்தகம் போன்றவற்றில் மனதை செலுத்துதல் சாலசிறந்தது.
தோட்டம் வளர்த்தல்(Gardening), வண்ண மீன்கள் வளர்த்தல்(Aquarium) - இவைகள் கூட மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன.
ஆலயத்திற்கு குடும்பத்தோடு சென்று வழிபாடு புரிதல் ஒரு வகை மகிழ்ச்சி. அதி
காலையில் எழுந்து உடல் பயிற்சி செய்தல் உடலிற்கு மட்டும் அல்ல மனதிற்கும்
வலிமையை அளிக்கின்றது.
உழைப்பு என்பது ஒரு பேரின்பம், அதை பலரும் புரிந்துகொள்வதே இல்லை.
இவ்வகை செயல்கள் செய்யும் போது மட்டும் அல்ல அதை நினைக்கும் பொழுது எல்லாம் மன நிறைவும் மகிழ்ச்சியும் தரும். ஒரு வகையில் ப்லோக்கிங்(blogging) கூட மன நிறைவை தருகிறது.
வாழ்கையில் நாம் எப்பொழுதும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும், எப்பொழுதும் ஓடிகொண்டே இருக்கவேண்டும். நாம் நின்றுவிட்டால் தேங்கிய நீரோடையாக மாறிவிடுவோம்(பிறகு, ஒன்று காய்ந்து விடுவோம், இல்லை அசுத்தமாக மாறிவிடுவோம்).
No comments:
Post a Comment