Sunday, March 16, 2014

ஏதென்ஸின் பள்ளிகூடம்



"ஏதென்ஸின் பள்ளிகூடம்" எனக்கு பிடித்த ஒரு புகழ் வாய்ந்த முரால்(mural) ஒவியம்(உத்திரம் மற்றும் சுவற்றில் வரையப்படும் ஒவியம்).

இது  இத்தாலிய ரெனெஸ்ஸான்ஸ்(1400 - 1690) கால கட்டத்தில் வரையப்பட்டது. உலக புகழ் பெற்ற  ஒவியரும் கட்டிடக்கலைஞருமான ரப்ஹெலால் (Raphel) வரையப்பட்டது.

சரி ரிமஸ், அப்படி என்ன தான் இருக்கிறது இந்த ஒவியதில்  ? !!

இந்த ஒவியம் பல்வேரு நிலைகளில் என்னை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு  நிலையக நாம் பார்க்கலாம்.

முதலில் இந்த ஒவியதின் கருத்தாக்கம்(concept).

இந்த ஒவியம் பல்வெரு மெய்தேடல் அறிஞர்கள் ஒரு கூடாரத்தில் ஒன்றுகூடி இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவற்றுள் முதன்மையனவர்களான சாக்ரடீஸின் பிரதான சிடரான ப்ளடோ(Plato)வையும், அவரது சிடரான அரிஸ்டாடில்(Aristotle)-லையும் இந்த ஒவியதின் மைய பகுதியில் எதோ விவாதம் செய்து கொண்டு இருப்பதை பார்கலாம்.


ப்ளடோ "இந்த திடபொருள் உலகத்தை சார்ந்த எல்லா தோற்ற்ங்களுக்கும்(Form) ஒரு பிரதான(உயரிய) சாராம்சம்(Abstract)" இருப்பதாக தன் விரலை உயர்த்தி சுட்டி காட்டி இருபது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் வலக்கரத்தில் திமியாஸ் என்ற தனது மெய்தேடல் உரையாடல்களின் தொகுப்பை வைத்திருகிறார்.

இதற்கு மாறாக அரிஸ்டாடில் இந்த திடபொருள் உலகத்தை அறிவியல் ஆய்வோடும் ஆராச்சினாலும் மட்டுமே கண்டு உணர முடியும் என்பதை சுட்டி காட்டும் விதமாக தன் வலகையை கீழ் நோகி காட்டுகிறார், மற்றும் ஒரு கையில் தனது சொற்பொழிவுகளின் தொகுப்பான "நெறிமுறைகள்" (Ethics) என்ற புத்தகத்தை வைத்து இருகிறார்.

ப்ளடோவின் வலது புறதில் சாக்ரடிஸ் இளைஞர்களின் மத்தியில் உரையாடுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment